sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் திருமாங்கல்யம் அபேஸ்

/

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் திருமாங்கல்யம் அபேஸ்

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் திருமாங்கல்யம் அபேஸ்

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் திருமாங்கல்யம் அபேஸ்


ADDED : ஜூன் 11, 2024 07:58 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, செட்டிமேடு கிராமத்தில் உள்ள அழகு திருவாத்தம்மன் கோவிலின் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிமேட்டில், கிராம தேவதையான அழகு திருவாத்தம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன், 44, என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாக பூசாரியாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு, மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு சவரன் திருமாங்கல்யத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த அவர், மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு கைரேகை நிபுணர்கள், கோவில் வளாகத்தில் தடயங்களை ஆய்வு செய்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us