sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஒரே கிராம எல்லையில் 2 தாலுகா சாத்தங்குப்பம் மக்கள் அலைக்கழிப்பு 20 கி.மீ., சுற்றவிடும் அதிகாரிகள்

/

ஒரே கிராம எல்லையில் 2 தாலுகா சாத்தங்குப்பம் மக்கள் அலைக்கழிப்பு 20 கி.மீ., சுற்றவிடும் அதிகாரிகள்

ஒரே கிராம எல்லையில் 2 தாலுகா சாத்தங்குப்பம் மக்கள் அலைக்கழிப்பு 20 கி.மீ., சுற்றவிடும் அதிகாரிகள்

ஒரே கிராம எல்லையில் 2 தாலுகா சாத்தங்குப்பம் மக்கள் அலைக்கழிப்பு 20 கி.மீ., சுற்றவிடும் அதிகாரிகள்


ADDED : ஆக 22, 2024 07:32 PM

Google News

ADDED : ஆக 22, 2024 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில், கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில், இந்த கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் கிராமங்கள் வருகின்றன.

ஆனால், தாலுகா நிர்வாக கட்டுப்பாட்டில், சாத்தங்குப்பம் கிராமம் மட்டும், மாம்பாக்கம் குறுவட்டத்திலும், கூடுவாஞ்சேரியில் இயங்கும் வண்டலுார் தாலுகா கட்டுப்பாட்டிலும் உள்ளது.

இதனால், இக்கிராம மக்கள் ஊரக வளர்ச்சி திட்டம் சார்ந்த பல்வேறு சேவைகளை பெற, 8 கி.மீ.,யில் உள்ள திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

அதேபோல், வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை பெற, 20 கி.மீ., பயணியத்து கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூருக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இக்கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சாத்தங்குப்பம் கிராமத்தை கேளம்பாக்கம் வருவாய் குறுவட்டத்திலும், திருப்போரூர் தாலுகாவிலும் இணைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கேளம்பாக்கம் ஊராட்சி சென்னைக்கு மிக அருகில் உள்ளது. இந்த ஊராட்சியின் குடிநீர் ஆதாரம் சாத்தங்குப்பம் கிராமத்தில் உள்ளது. திருப்போரூர் வட்டத்தை பிரித்த போது, சாத்தங்குப்பம் கிராமம், வண்டலூர் தாலுகாவில் இணைந்தது.

இதனால், வருவாய்த்துறை சார்ந்த சேவையை பெற, கிராம மக்கள் வண்டலூர் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இக்கிராம மக்களின் நலன் கருதி, சாத்தங்குப்பத்தை திருப்போரூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us