sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

/

மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : ஏப் 23, 2024 04:13 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மேலமையூர் லட்சுமி நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவர், 2009ம் ஆண்டு, மே மாதம் 22ம் தேதி, தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு மும்முனை இணைப்பு பெற, செங்கல்பட்டு மின் வாரிய அலுவலக வணிக உதவியாளர் சரவணன், 48, என்பவரை அணுகினார்.

அப்போது, மின் இணைப்பு வழங்க, சரவணன் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பின், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, நடராஜனிடம் கொடுத்து அனுப்பினர். நடராஜன் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரவணனை மடக்கிப் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சரவணனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us