/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை கோவிலில் ரூ.28.72 லட்சம் காணிக்கை
/
திருவிடந்தை கோவிலில் ரூ.28.72 லட்சம் காணிக்கை
ADDED : மே 28, 2024 04:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில் உண்டியல்களில், பக்தர்கள், 28.72 லட்சம் ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
ஹிந்து சமய அறநிலைத்துறையின்கீழ் உள்ள இக்கோவிலில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள், ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர்கள் சரவணன், குமரவேல், மேகவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் கணக்கிடப்பட்டன.
அதில், 28 லட்சத்து 72 ஆயிரத்து 503 ரூபாய், 201.800 கிராம் தங்கம், 201.900 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.