sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சித்தாமூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

/

சித்தாமூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

சித்தாமூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

சித்தாமூரில் குட்கா விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'


ADDED : ஆக 08, 2024 12:06 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், :செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சித்தாமூர் போலீசார், சித்தாமூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில், நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்த சேகர், 52, சுந்தர், 45, ராஜி, 63, ஆகிய மூன்று பேரும், தனித்தனியே கடை வைத்துள்ளனர்.

இங்கு, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, தலா 30 பாக்கெட் குட்காவை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூன்று கடைகளுக்கும், தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.

பின், சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிந்து, மூன்று பேரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், சேகர், சுந்தர் இருவரும் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜி, உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக, நீதிமன்ற பெயிலில் விடுவிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us