/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்பக்கலை மாணவர்களுக்கு '3டி' தொழில்நுட்ப பயிற்சி
/
சிற்பக்கலை மாணவர்களுக்கு '3டி' தொழில்நுட்ப பயிற்சி
சிற்பக்கலை மாணவர்களுக்கு '3டி' தொழில்நுட்ப பயிற்சி
சிற்பக்கலை மாணவர்களுக்கு '3டி' தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஏப் 27, 2024 12:16 AM

மாமல்லபுரம்:அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களுக்கு, மரபுக் கலைகளை முப்பரிமாண தொழில்நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக கலை, பண்பாட்டுத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் அரசு மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது. இங்கு, பாரம்பரிய மரபு கட்டடக்கலை, கல், உலோகம், மரம், சுதை ஆகிய சிற்பக் கலைகள், ஓவியக்கலை ஆகிய கலை படிப்புகள், நான்காண்டுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
வரைபடம் உள்ளிட்டவற்றில் மேம்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களை, இக்கல்லுாரி மாணவர்கள் அறியும் வகையில், இங்கு ஏற்கனவே ஆட்டோகேட், 2டி உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மாணவர்களுக்கு, 3டி எனப்படும் நவீன முப்பரிமாண நுட்ப பயிற்சியளிக்க, கலை மற்றும் பண்பாட்டுத் துறை நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை, சென்னை, யாளி நிறுவனம் சார்பில், கல்லுாரி முதல்வர் ராமன் மேற்பார்வையில் பயிற்சிளிக்கப்பட்டது.
இது குறித்து, முதல்வர் கூறியதாவது:
இக்கல்லுாரி முன்னாள் மாணவர்களே, யாளி நிறுவனத்தை நடத்துகின்றனர். மரபுக் கலைகளை நன்கு அறிந்த அவர்களுக்கு, கட்டடம் மற்றும் சிற்பக் கலைகளில் முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், தனித்துவம் உண்டு.
தொழில்நுட்ப பயன்பாட்டை, பல்வேறு 3டி படங்கள் திரையிட்டு, மென்பொருள் பயன்பாட்டை விளக்கி, மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளித்துள்ளோம். அவர்களுக்கு பயனாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

