/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5.5 சவரன் கொள்ளை தாக்குதலில் மூதாட்டி பலி
/
5.5 சவரன் கொள்ளை தாக்குதலில் மூதாட்டி பலி
ADDED : செப் 01, 2024 04:02 AM
சென்னை : சென்னை, மயிலாப்பூர் சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் செண்பகம், 75. வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 22ம் தேதி அவரது வீட்டிற்கு, தங்கை ரங்கநாயகி சென்ற போது, செண்பகம் சுயநினைவின்றி இருந்தார். அணிந்திருந்த செயின், வளையல் போன்ற தங்க நகைகள் காணவில்லை. இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்படி மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், 21ம் தேதி மர்ம நபர் ஒருவர், செண்பகம் வீட்டிற்குள் சென்று வந்தது தெரிய வந்தது.
அவர் பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை வைத்து, ராயப்பேட்டையைச் சேர்ந்த அசார் ஹுசையின், 29 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், செண்பகத்தை தாக்கி, 5.5 சவரன் நகையை திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.