/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
/
ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
ரூ.90 லட்சத்தில் கால்வாய் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : ஆக 10, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார் : பருவமழை பாதிப்பை தவிர்க்க, தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்தில், 90 லட்சம் ரூபாய் செலவில், கால்வாய்களை துார்வாரும் பணி துவங்கியுள்ளது.
அதன்படி, பாப்பான் கால்வாயில், சுண்ணாம்பு கால்வாய் முதல் சி.டி.ஓ., காலனி வரை - 600 அடி; கண்ணன் அவென்யூ - 500 அடி; புறவழிச்சாலை அணுகு சாலையில், கன்னடப்பாளையம் சந்திப்பு முதல் மண்ணுாரான் குளம் வரை 700 அடி என, 15 வார்டுகளிலும் உள்ள கால்வாய்களை துார்வாரும் பணி நடந்து வருகிறது.
மழைக்கு முன், இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

