sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மக்களுடன் முதல்வர்' முகாமில் 942 மனு ஏற்பு

/

மக்களுடன் முதல்வர்' முகாமில் 942 மனு ஏற்பு

மக்களுடன் முதல்வர்' முகாமில் 942 மனு ஏற்பு

மக்களுடன் முதல்வர்' முகாமில் 942 மனு ஏற்பு


ADDED : ஜூலை 31, 2024 10:18 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், ஆக. 1-

மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நேற்று எலப்பாக்கம் ஊராட்சியில் துவங்கியது.

இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத் திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின்வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.

எலப்பாக்கத்தில் நடந்த முகாமில், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில், பொதுமக்களிடமிருந்து, 942 மனுக்கள் வரப்பெற்றன.

திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் நடந்த முகாமில், மானாமதி உட்பட சுற்றியுள்ள பையனுார், ஆமூர், சிறுதாவூர் ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த, 300க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.

அதில், மானாமதி ஊராட்சி நிர்வாகம் சார்பில், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்; புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us