sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு சிங்கபெருமாள் கோவிலில் குடிநீர் வீண்

/

பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு சிங்கபெருமாள் கோவிலில் குடிநீர் வீண்

பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு சிங்கபெருமாள் கோவிலில் குடிநீர் வீண்

பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு சிங்கபெருமாள் கோவிலில் குடிநீர் வீண்


ADDED : ஜூலை 27, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில், செங்கல்பட்டு மார்க்கத்தில், பூமிக்கு அடியில் கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் சிமென்ட் குழாய்கள் செல்கின்றன.

நேற்று மாலை, மேம்பால பணிகளுக்காக, இந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக, பைப் லைன் உடைந்து, தண்ணீர் வெளியே பீறிட்டு வெளியேறியது.

தொடர்ந்து சாலையில் குடிநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முழுதும் நனைந்தனர்.

பணியில் இருந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, வால்வுகளை மூடி குழாய்களில் வரும் குடிநீரை நிறுத்தினர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, சாலையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us