/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு
/
குட்கா விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 17, 2024 07:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, மேலமையூர் கிராமத்திற்கு சென்ற போலீசார், அங்கு செயல்பட்டு வந்த பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு, விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின், கடையின் உரிமையாளர் வினாயகம், 40, மீது வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

