sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குப்பை கொட்டும் இடமான பாழடைந்த குடிநீர் கிணறு

/

குப்பை கொட்டும் இடமான பாழடைந்த குடிநீர் கிணறு

குப்பை கொட்டும் இடமான பாழடைந்த குடிநீர் கிணறு

குப்பை கொட்டும் இடமான பாழடைந்த குடிநீர் கிணறு


ADDED : செப் 12, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 12, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:கூடலுார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், சேவை மைய கட்டடம் அமைந்துள்ள பகுதியில், மக்களின் குடிநீர் தேவைக்காக, 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.

தற்போது, சில ஆண்டுகளாக குடிநீர் கிணறு பயன்பாடு இன்றி கைவிடப்பட்டது. இந்த திறந்தவெளி கிணற்றில், அப்பகுதிவாசிகள் தற்போது குப்பை கொட்டி வருகின்றனர்.

இதனால், சுகாதார சீர்கேடு அடைவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, பயன்பாடின்றி உள்ள கிணற்றை மண் கொட்டி சமன்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறியதாவது:

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, தெருக்குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடக்கிறது. சில ஆண்டுகளாக, இந்த கிணற்று நீரை, யாரும் பயன்படுத்துவது இல்லை.

திறந்த நிலையில் கிணறு உள்ளதால், இப்பகுதிவாசிகள் குப்பையை கொட்டி பாழாக்கி வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக, கிணற்றில் தண்ணீர் தேங்கி, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us