sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி

/

துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி

துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி

துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி


ADDED : மே 13, 2024 06:14 AM

Google News

ADDED : மே 13, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல் : சென்னை புழல் துணை மின் நிலையத்தில் இருந்து, புழல், கதிர்வேடு, காவாங்கரை, செங்குன்றம், சூரப்பட்டு, கொளத்துார் சுற்றுவட்டாரங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக, அந்த அலுவலகத்தின் வாயிலாக, சென்னை மத்திய சிறை, சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், வேளாண்மை துறை அலுவலகம், மாநகராட்சி மருத்துவமனைகள், அரசு தனியார் பள்ளி மற்றும் நிறுவனங்கள் மின் வினியோகம் பெறுகின்றன. அதனால், இந்த துணை மின் நிலைய அலுவலகத்தின் வாயிலாக, 80,000த்துக்கும் மேற்பட்ட நுகர்வோர் இணைப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை 7:00 மணி அளவில், திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மின் மாற்றிகளில் ஒன்று, மின் பகிர்மான வழித்தட, 'பீடரில்' ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

நேற்று விடுமுறை என்பதால், போதிய பணியாளர்கள் இல்லை. இரவு பணியில் இருந்த சிலர், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் வீரர்கள், அங்கு சென்று தீயை அணைத்தனர். அதன்பின் தகவல் அறிந்து மின் வாரிய அலுவலர்கள், தீயில் சேதமடைந்த மின் மாற்றியின் வழித்தடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதனால், 2 மணி நேரம் நீடித்த மின் தடையால், விடுமுறை நாளில் அயர்ந்து துாங்கிய மக்கள், துாக்கம் இழந்து அதிருப்தி அடைந்தனர். கோடையில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், போதிய கண்காணிப்பு, பராமரிப்பு இன்றி, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

அலட்சியம்

கடந்தாண்டு செப்டம்பர், 10ம் தேதி இரவும், இந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மூன்று அறைகளில் இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆறு கம்ப்யூட்டர், உயர் அழுத்த மின் கேபிள்கள், மின் பாதைகளுக்கான விபரங்கள், புதிய மற்றும் கூடுதல் மின் இணைப்பு வேண்டிய நுகர்வோரின் விண்ணப்பங்கள், பழுது குறித்த புகார் மனுக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பழைய மற்றும் புதிய ஸ்மார்ட் மீட்டர்கள், மின் சாதன உதிரிபாகங்கள், அலுவலக பயன்பாட்டில் இருந்த பொருட்கள் என, அனைத்தும் தீக்கிரையாகின. தொடரும் தீ விபத்திற்கு காரணம், அலுவலக பணியாளர்களின் அலட்சியமா, சதி வேலை காரணமா என, மின்வாரிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us