sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செயல்படாத நவீன இயந்திரம் படப்பையில் தேங்கிய குப்பை

/

செயல்படாத நவீன இயந்திரம் படப்பையில் தேங்கிய குப்பை

செயல்படாத நவீன இயந்திரம் படப்பையில் தேங்கிய குப்பை

செயல்படாத நவீன இயந்திரம் படப்பையில் தேங்கிய குப்பை


ADDED : ஜூன் 18, 2024 05:24 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, : படப்பை ஊராட்சியில் காந்த வெப்ப சிதைவு இந்திர கூடம் முறையாக இயங்காததால் அங்கு மலைபோல் குப்பை தேங்கி கிடக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்,குன்றத்துார் ஒன்றியத்தில் படப்பை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நாளொன்றுக்கு 4,000 கிலோ குப்பை சேகரமாவதால் படப்பை ஊராட்சியில் குப்பைஅகற்றுவது பிரச்னையாக இருந்து வந்தது.

இந்நிலையில், ஒரகடத் தில் உள்ள ரெனால்டு நிசான் கார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் 61 லட்சம் ரூபாய் மதிப்பில் காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம் படப்பையில் 2022ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரம்எண்ணெய், டீசல், மின்சாரம், நிலக்கரி ஆகியஎரிபொருள் இல்லாமல் காந்த சக்தி மூலம் ஏற்படும் வெப்பத்தினால் குப்பையை சாம்பலாக்க முடியும். நாளொன்றுக்கு 5,000 கிலோ டன் குப்பை வரை இந்த இயந்திரத்தில் அழிக்க முடியும் எனஅறிவிக்கப்பட்டது.

இதனால், குப்பைஅகற்றும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த காந்த வெப்ப சிதைவு கூடம் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.

படப்பை ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, இந்த கூடத்தின் முன் மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடுஏற்பட்டுள்ளது.

காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடத்தை திறந்து குப்பையை முறையாக அழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us