/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
/
கால்வாயில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 14, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி, புதுச்சேரி சாலை கால்வாய் பாலத்தின்கீழ், நேற்று மாலை 4:30 மணிக்கு, ஆண் உடல் கிடப்பதாக, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தெரிய வந்தது.
அந்த உடலை மீட்ட போலீசார், பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த நபர், 35 - 40 வயது மதிக்கத்தக்கவர், அவர், யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என, போலீசார் தெரிவித்தனர்.