sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'ஆசி' வழங்கி ரூ.7,500 பறிப்பு 'பலே' திருநங்கைக்கு வலை

/

'ஆசி' வழங்கி ரூ.7,500 பறிப்பு 'பலே' திருநங்கைக்கு வலை

'ஆசி' வழங்கி ரூ.7,500 பறிப்பு 'பலே' திருநங்கைக்கு வலை

'ஆசி' வழங்கி ரூ.7,500 பறிப்பு 'பலே' திருநங்கைக்கு வலை


ADDED : ஏப் 17, 2024 09:46 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது இம்தியாஸ், 30. இவர், தன் குழந்தையை சிகிச்சைக்காக, சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில்உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்பகுதியில் உள்ள தனியார் விடுதி யில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

இவர், நேற்று முன் தினம் சிகிச்சை முடிந்து, மனைவி மற்றும் குழந்தையுடன் ஆயிரம்விளக்கு, ராமசாமிதெருவில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றார். அப்போது அந்த இடத்தில் நின்ற திருநங்கை, குழந்தை மற்றும் பெற்றோருக்கு 'ஆசி' வழங்குவது போல நடித்து, 7,500 ரூபாய் பறித்து தப்பி உள்ளார்.

இது குறித்து, முகமது இம்தியாஸ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளைஆய்வு செய்து தேடிவருகின்றனர்.

சென்னையில், சபல நபர்களை குறி வைத்து திருநங்கையர் பணம் பறித்து வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பிரபல ஹோட்டல் உள்ள இடத்தில் இருந்து, லிபர்ட்டி பாலம் வரை திருநங்கையர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்களிடம் பலர் பணத்தை இழந்துள்ளனர். பின், அவமானம் கருதி போலீசில் புகார் அளிக்காமல் சென்று விடுவதாக சமூக ஆர்வலர்கள்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us