/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி
/
நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி
நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி
நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி
ADDED : ஜூலை 31, 2024 11:34 PM

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் மலைமேடு பகுதியைசேர்ந்தவர் சேது என்ற தமிழரசன், 24. இவர், கடந்த 29ம் தேதி, ஒரகடம் அடுத்த வல்லக் கோட்டையில் உள்ள முருகன் கோவிலுக்கு, 'யமஹா பேஷினோ' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கோவிலில் தரிசனம் முடித்த பின், ஒரகடம் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், இருசக்கரவாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, கொளத்துார் பாரதி நகர் பகுதியில், சாலையின் குறுக்கே நாய் ஒன்றுஓடியது.
அப்போது, தமிழரசன் நாய் மீது மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தை திருப்பிய போது, சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில், தமிழரசனுக்கு படுகாயம் ஏற்பட்டது.
சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, தமிழரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.