sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி

/

நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி

நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி

நாய் குறுக்கே வந்ததால் விபத்து; சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி


ADDED : ஜூலை 31, 2024 11:34 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் மலைமேடு பகுதியைசேர்ந்தவர் சேது என்ற தமிழரசன், 24. இவர், கடந்த 29ம் தேதி, ஒரகடம் அடுத்த வல்லக் கோட்டையில் உள்ள முருகன் கோவிலுக்கு, 'யமஹா பேஷினோ' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

கோவிலில் தரிசனம் முடித்த பின், ஒரகடம் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், இருசக்கரவாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, கொளத்துார் பாரதி நகர் பகுதியில், சாலையின் குறுக்கே நாய் ஒன்றுஓடியது.

அப்போது, தமிழரசன் நாய் மீது மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தை திருப்பிய போது, சாலையின் மையத் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில், தமிழரசனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு, தமிழரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.






      Dinamalar
      Follow us