sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த விபத்துக்குள்ளான காரில் திடீர் தீ

/

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த விபத்துக்குள்ளான காரில் திடீர் தீ

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த விபத்துக்குள்ளான காரில் திடீர் தீ

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த விபத்துக்குள்ளான காரில் திடீர் தீ


ADDED : மே 28, 2024 11:38 PM

Google News

ADDED : மே 28, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்து, ஜி.எஸ்.டி., சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விபத்துக்குள்ளான கார் ஒன்று, நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாகச் சென்றவர்கள், மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கார் தீப்பற்றி எரிந்த பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். காரில் எரிபொருள் இருந்ததால்,கார் முழுதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தால், மதுராந்தகம் ஜி.எஸ்.டி., சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து, சமூக ஆர்வலர் மகேஷ்குமார், 33, கூறியதாவது:

மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்துக்குள்ளான வாகனங்களை பறிமுதல் செய்து வரும் போலீசார், போதிய இடவசதி இன்றி உள்ளதால், ஜி.எஸ்.டி., சாலை ஓரம் நிறுத்தி வைக்கின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து பேட்டரி மற்றும் எரிபொருளை எடுத்து, உரிமையாளரிடம் ஒப்படைத்த பின், வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு, செய்வதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us