sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு

/

பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு

பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு

பள்ளி அருகே குப்பை தேக்கம் இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 29, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 50 துாய்மை பணியாளர்கள் வாயிலாக, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில், இரண்டு அரசு பள்ளிகள் மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

கிழக்கு கடற்கரை சாலைக்கும், புதுத்தோட்டம் செல்லும் சாலைக்கும் இடையே உள்ள பகுதியில் செயல்படும் கடைகள், உணவகங்களின் கழிவுகள், சாலை ஓரத்தில் கொட்டப்படுவதாகவும், அதே பகுதியில் குப்பையை எரிப்பதாகவும், அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பள்ளி அருகே குப்பை தேங்குவதால், துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி அருகே குப்பை தேங்குவதை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us