sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் போட்டி கிராமப்புறங்களில் படையெடுக்கும் நிர்வாகிகள்

/

மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் போட்டி கிராமப்புறங்களில் படையெடுக்கும் நிர்வாகிகள்

மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் போட்டி கிராமப்புறங்களில் படையெடுக்கும் நிர்வாகிகள்

மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் போட்டி கிராமப்புறங்களில் படையெடுக்கும் நிர்வாகிகள்


ADDED : ஏப் 24, 2024 09:19 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடப்பாக்கம், செய்யூர், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில், 1 - 12ம் வகுப்புகளுக்கான பள்ளித் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை துவங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து தரப்பு மாணவர்களையும் அரசுப்பள்ளியின் பக்கம் இழுக்க, அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லுாரியில் சேரும் மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குதல், இளநிலைத் தொழிற்கல்விப் பட்டப்படிப்பில், 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்குதல், தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குதல் எனப் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆனால், தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கு என, தனி குழு அமைத்து, தங்களது பள்ளியின் வசதி மற்றும் சிறப்புகள், வசதிகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் தங்கள் பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தேர்ச்சி விகிதம் பற்றி விளக்கி பெற்றோரை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கட்டாய கல்வி திருத்தச் சட்டத்தின் படி வழங்கப்படும், 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், மாணவர்களுக்கு இலவச கல்வி குறித்து, கிராமப்பகுதி மக்களிடம் எடுத்துக்கூறி, அவர்களின் குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்ப்பதில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் குழுக்களாக பிரிக்கப்பட்டு, பள்ளி பேருந்துகள் வாயிலாக கிராமம் கிராமமாக சென்று, பெற்றோர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களின் குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

.






      Dinamalar
      Follow us