sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருக்கழுக்குன்றம் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு மாயமாவதாக குற்றச்சாட்டு

/

திருக்கழுக்குன்றம் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு மாயமாவதாக குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு மாயமாவதாக குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம் ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்கு மாயமாவதாக குற்றச்சாட்டு


ADDED : மே 11, 2024 11:40 PM

Google News

ADDED : மே 11, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வட்டார ஊராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து, வசிப்பிட பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. இதனால், தெருவிளக்கு பயன்பாடு மற்றும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

ஆரம்பத்தில் சாதாரண டியூப் லைட், சோடியம் விளக்கு, சி.எப்.எல்., என பயன்படுத்தப்பட்டது. மின் சிக்கனம் கருதி, தற்போது எல்.இ.டி., விளக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஊராட்சி பகுதிகளில், 50 வாட்ஸ் எல்.இ.டி., விளக்குகள் பயன்பாட்டில் உள்ளன. திருக்கழுக்குன்றம் வட்டார ஊராட்சிகளில், இவ்விளக்குகள் அடிக்கடி திருடு போவதாக கூறப்படும் நிலையில், 36 வாட்ஸ் எல்.இ.டி., பல்பு பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பட்டிக்காடு, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், எல்.இ.டி., பல்பு பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

மக்கள் வசிக்கும் இடங்களில், 50 வாட்ஸ் எல்.இ.டி., விளக்கு பொருத்தியுள்ளோம். ஊருக்கு ஒதுக்குப்புற இடங்களில் உள்ள எல்.இ.டி., விளக்குகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்று விற்கின்றனர். 1,250 ரூபாய் விளக்கை, 500 ரூபாய்க்கு விற்கின்றனர். திருட்டை தவிர்க்கவே, ஊராட்சியின் எல்லை பகுதிகளில் மட்டும் மலிவு விலை பல்பு பொருத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us