sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நாற்காலி, குடிநீர் வசதி ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

/

நாற்காலி, குடிநீர் வசதி ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

நாற்காலி, குடிநீர் வசதி ரூ.18 லட்சம் ஒதுக்கீடு

நாற்காலி, குடிநீர் வசதி ரூ.18 லட்சம் ஒதுக்கீடு


ADDED : மார் 29, 2024 09:12 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலின்போது, ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் வரையிலான எல்லைக்கோடு வரை, குடிநீர் மற்றும் நாற்காலி வசதி உள்ளிட்டவற்றை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற செலவினங்கள் மேற்கொள்ள, கடந்த முறை தேர்தல் கமிஷன் வாயிலாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 1,300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.

இம்முறை லோக்சபா தேர்தலில் ஓட்டுச்சாவடி செலவுக்கான நிதி வழங்கும் அரசாணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என, நான்கு சட்ட சபை தொகுதியிலும் உள்ள, 1,398 ஓட்டுச்சாவடிகளுக்கு, 18.17 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us