sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தின்னலுார் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

/

தின்னலுார் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

தின்னலுார் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

தின்னலுார் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு


ADDED : செப் 12, 2024 08:44 PM

Google News

ADDED : செப் 12, 2024 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தின்னலுார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சி அலுவலக கட்டடம் இல்லாததால், தற்போதுவரை சேவை மைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், ஊராட்சி ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை பாதுகாப்பதில் மிக சிரமம் அடைந்தனர்.

இது குறித்து, அரசுக்கு பலமுறை, ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தற்போது, ஊராட்சி நிதி 10 லட்சம் ரூபாய் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளர்ச்சி உறுதி திட்டத்தின் நிதி 20 லட்சம் ரூபாய் என, மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி அலுவலகம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடப் பணிகளை விரைந்து துவக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us