sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையத்தால் அவதி

/

மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையத்தால் அவதி

மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையத்தால் அவதி

மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையத்தால் அவதி


ADDED : ஏப் 28, 2024 02:06 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பருக்கல் ஊராட்சிக்குட்பட்ட மேட்டு பருக்கல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி மைய கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. நாளடைவில் மின்கம்பிகள் பழுதடைந்ததால், சில ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பழுதடைந்த மின்கம்பிகள், தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், மின்சார வசதி இல்லாமல் பகல் வேளையில் வெயிலின் தாக்கம் காரணமாக, குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us