/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறவழிச்சாலையில் மண்குவியல் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
/
புறவழிச்சாலையில் மண்குவியல் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
புறவழிச்சாலையில் மண்குவியல் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
புறவழிச்சாலையில் மண்குவியல் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மே 02, 2024 01:35 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகரில் இருந்து புறவழிச்சாலையில் சென்று, தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் சந்திப்பு சாலையின் வளைவு பகுதியில், 300 மீட்டர் துாரத்திற்கு சாலையோரம் மண்குவியல் ஏற்பட்டுள்ளது.
இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
ஒரே சமயத்தில், இரண்டு பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் செல்ல முடியாத நிலைக்கு, ஜல்லிக்கற்கள் மற்றும் மண்குவியல் ஏற்பட்டுள்ளது.சிலர், மண்ணில் சறுக்கி, கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, புறவழிச் சாலையோரம் உள்ள மண்குவியலை, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

