/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரத்தில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
/
சாலையோரத்தில் தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 09, 2024 01:41 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே சிறுமயிலுார் - -பெரியகயப்பாக்கம் இடையே, 5 கி.மீ., நீளமுடைய தார் சாலை உள்ளது. பேட்டை, கடப்பேரி, இரண்டடி, மதுராபுதுார் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில், சாலை ஓரத்தில் தடுப்பு இல்லாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
ஒரே சமயத்தில் இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே வந்தால், சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. இதனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள், அப்பகுதியை கடக்கும் போது அச்சமடைகின்றனர்.
கடந்த ஆண்டு, இப்பகுதியில் தனியார் கல்லுாரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.