sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மனைவியின் பிறந்த நாளுக்கு அலங்காரம் செய்தவர் பலி

/

மனைவியின் பிறந்த நாளுக்கு அலங்காரம் செய்தவர் பலி

மனைவியின் பிறந்த நாளுக்கு அலங்காரம் செய்தவர் பலி

மனைவியின் பிறந்த நாளுக்கு அலங்காரம் செய்தவர் பலி


ADDED : ஜூன் 08, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை, மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால், 29. இவர், மேற்கு மாம்பலம், ஆரிய கவுடா சாலையில், 'பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தார்.

இவரது மனைவி கீர்த்தி, 25. இவர்களுக்கு எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், மனைவியின் 25வது பிறந்த நாளை கொண்டாட, நேற்று முன்தினம் மாலை வீட்டில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் அகஸ்டின் பால் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அகஸ்டின் பால் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார், உடலை மீட்டு கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us