/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கங்கை அம்மன் கோவிலில் பந்தக்கால்
/
கங்கை அம்மன் கோவிலில் பந்தக்கால்
ADDED : மார் 02, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் யாக சாலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, பந்தக்காலுக்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டபட்டு, பந்த கால் நடப்பட்டது. விழாவில், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.