sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டிரைவர் மீது சரமாரி தாக்குதல் சுங்கச்சாவடி ஊழியர்கள் அட்டூழியம்

/

டிரைவர் மீது சரமாரி தாக்குதல் சுங்கச்சாவடி ஊழியர்கள் அட்டூழியம்

டிரைவர் மீது சரமாரி தாக்குதல் சுங்கச்சாவடி ஊழியர்கள் அட்டூழியம்

டிரைவர் மீது சரமாரி தாக்குதல் சுங்கச்சாவடி ஊழியர்கள் அட்டூழியம்


ADDED : மார் 23, 2024 10:19 PM

Google News

ADDED : மார் 23, 2024 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சென்னை சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 38. இவர், நேற்று முன்தினம் இரவு தன் குடும்பத்துடன், 'டாடா' சரக்கு வாகனத்தில் செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்துவது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், சுங்கச்சாவடி ஊழியர்கள் முருகனை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த முருகன் குடும்பத்தினர், சுங்கச்சாவடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மற்ற வாகன ஓட்டிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், காயமடைந்த முருகனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து, மற்ற வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தால் பரனுார் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us