sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் ஞாயிறுகளில் பீச் - செங்கல்பட்டு 10 ரயில்கள் ரத்து

/

வரும் ஞாயிறுகளில் பீச் - செங்கல்பட்டு 10 ரயில்கள் ரத்து

வரும் ஞாயிறுகளில் பீச் - செங்கல்பட்டு 10 ரயில்கள் ரத்து

வரும் ஞாயிறுகளில் பீச் - செங்கல்பட்டு 10 ரயில்கள் ரத்து


ADDED : டிச 07, 2024 12:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், நாளை மறுநாள் முதல், ஞாயிற்றுக்கிழமைகளில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில், ரயில் பாதுகாப்பு இயக்கத்தை கருத்தில் வைத்து, கடந்த மாதத்தில், 14 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்து, புதிய கால அட்டவணையை மாற்றியமைத்துள்ளது. இது, வரும் 8ம் தேதி முதல் அமலாகிறது. மறு உத்தரவு வரும் வரை, இந்த மின்சார ரயில்கள் ரத்து தொடரும்.

கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us