sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தமிழகத்தில் சிறந்த நகராட்சி; மறைமலை நகருக்கு 2ம் இடம்

/

தமிழகத்தில் சிறந்த நகராட்சி; மறைமலை நகருக்கு 2ம் இடம்

தமிழகத்தில் சிறந்த நகராட்சி; மறைமலை நகருக்கு 2ம் இடம்

தமிழகத்தில் சிறந்த நகராட்சி; மறைமலை நகருக்கு 2ம் இடம்


ADDED : ஆக 16, 2024 11:46 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், : சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விருது வழங்கும் முன், தமிழகத்தில் உள்ள 134 நகராட்சிகளில், சுகாதாரம், வருவாய், பொறியியல், நகரப்புனரமைப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் சிறந்து விளங்கும், மூன்று நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டிற்கான சிறந்த நகராட்சியாக, திருவாரூர் முதலிடத்தையும், மறைமலை நகர் இரண்டாம் இடத்தையும், ராணிப்பேட்டை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, விருது மற்றும் பரிசுத் தொகைக்கான வரைவோலையை, மறைமலை நகர் தி.மு.க., நகர சபை தலைவர் சண்முகத்திடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் மற்றும் மறைமலை நகர் நகராட்சி கமிஷனர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us