/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு
/
மின்சாரம் பாய்ந்து பீஹார் தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 14, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுப்பட்டினம்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப், 31. கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் ரஹ்மத் நகரில் இயங்கி வரும் தனியார் 'ஹாலோபிளாக்' தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை 9:30 மணிக்கு, மின்சாரத்தில் இயங்கும் கல் அறுக்கும் இயந்திரத்தை கையாண்டபோது, உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு, புதுப்பட்டினம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த கல்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.