ADDED : ஜூன் 01, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன், 33. ஆத்துார் கணபதி நகரில் உள்ள தன் நண்பரை காண, நேற்று முன்தினம், 'ஹீரோ ஸ்பிளென்டர்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.
நண்பரின் வீட்டு வாசலில், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, லோகநாதன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார்,விசாரணை நடத்திவருகின்றனர்.