ADDED : மே 09, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஜோனா பவுல்ராஜ், 24. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் வெளியே, தனது 'யமஹா' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து, ஜோனா பவுல்ராஜ் அளித்த புகாரின் பேரில், மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.