ADDED : மே 06, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு ரத்னம் நகரை சேர்ந்தவர் மகேஷ், 28. இவர், செங்கல்பட்டு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் யமஹா இருசக்கர வாகனத்தை, வழக்கம் போல நிறுத்தி விட்டு சென்றார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து, மகேஷ் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.