sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல் குவாரி குட்டையில் வாலிபர் உடல் மீட்பு

/

கல் குவாரி குட்டையில் வாலிபர் உடல் மீட்பு

கல் குவாரி குட்டையில் வாலிபர் உடல் மீட்பு

கல் குவாரி குட்டையில் வாலிபர் உடல் மீட்பு


ADDED : ஏப் 17, 2024 09:48 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட குன்றுக்காடு பகுதியில்உள்ள கல் குவாரி குட்டையில், சடலம் ஒன்று மிதப்பதாக, கேளம்பாக்கம் போலீசாருக்குதகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற கேளம்பாக்கம் போலீசார் மற்றும் சிறுசேரி தீயணைப்பு துறையினர், கல் குவாரி குட்டையில் மிதந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் திருச்சியை சேர்ந்த பாலா, 22, என்பவர், கடந்த 15ம் தேதி காலை 7:30 மணியளவில், திருச்சி வீட்டிலிருந்து புறப்பட்டு கோவளம் தனியார் ஹோட்டல் வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு வந்தார்.

தொடர்ந்து, 16ம் தேதி ஹோட்டல் வேலைக்கான நேர்முகத்தேர்வு முடித்து, மதியம் 2:15 மணியளவில் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசினார். பின், தொலைபேசி சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. பின், தொடர்புகொள்ள முடியவில்லை.

காணாமல் போன பாலாவை கண்டுபிடித்து தருமாறு, நேற்று முன்தினம் பாலாவின்உறவினர் ஆகாஷ், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று குன்றுக்காடு குல் குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது, காணாமல் போன பாலா என, விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலா கல் குவாரி குட்டையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு வீசி சென்றனரா என, பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.






      Dinamalar
      Follow us