/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்
/
செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்
ADDED : ஆக 18, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு முதுநிலை படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அதற்கு நீதி கேட்டு, நாடு முழுதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், 200க்கும் மேற்பட்டோர், கருப்பு பேட்ச் அணிந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

