sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி சீரழிவு

/

சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி சீரழிவு

சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி சீரழிவு

சிறுவர் விளையாட்டு திடல் பராமரிப்பின்றி சீரழிவு


ADDED : ஜூலை 18, 2024 12:01 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,:கருங்குழி பேரூராட்சியில், 9வது வார்டு, ஏரி நகர் பகுதி சிறுவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் சீரழிந்து வருகிறது.

கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 9வது வார்டுக்கு உட்பட்ட ஏரி நகர் தெருவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.

இங்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதி மற்றும் மின்சார இணைப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு, பேரூராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது, அப்பூங்கா பராமரிப்பின்றி, இருக்கைகள் உடைந்தும், பூங்காவின் உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்தும், குழந்தைகள் விளையாட முடியாதவாறு உள்ளது.

மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்களும் உடைந்து சீரழிந்த நிலையில் உள்ளன.

எனவே, பராமரிப்பு இன்றி உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us