sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சித்திரை விழா கடை உரிமம் ரூ.3.74 லட்சத்திற்கு ஏலம்

/

சித்திரை விழா கடை உரிமம் ரூ.3.74 லட்சத்திற்கு ஏலம்

சித்திரை விழா கடை உரிமம் ரூ.3.74 லட்சத்திற்கு ஏலம்

சித்திரை விழா கடை உரிமம் ரூ.3.74 லட்சத்திற்கு ஏலம்


ADDED : மார் 21, 2024 10:50 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேத கிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், சித்திரை பெருவிழா, ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது.

இதை முன்னிட்டு, தினமும் காலை, இரவு, உற்சவம் நடக்கும். திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், இங்கு வழிபடுவர்.

உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவில்வளாகத்தில் தற்காலிக கடைகள் வைத்துக் கொள்ள கோவில் நிர்வாகம் அனுமதிக்கும்.அவற்றுக்கு கட்டணம் வசூலிக்க, பொது ஏலம் நடத்தி,உரிமம் வழங்கப்படும்.

நேற்று முன்தினம், ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் பிரியா மேற்பார்வையில், பொது ஏலம்நடத்தப்பட்டது.

முன்வைப்பு தொகை செலுத்திய 11 பேர் பங்கேற்றனர். நிர்வாகம், ஏலம் கேட்பு ஆரம்ப தொகையாக, முதலில் 3.50 லட்சம் ரூபாய்நிர்ணயித்தது.

இத்தொகையை குறைக்குமாறு ஏலதாரர்கள் வலியுறுத்தியதால், 3 லட்சம் ரூபாய்க்கு குறைக்கப்பட்டது. பழனி என்பவர், அதிகபட்ச தொகையாக, 3.74 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரியதால், அவருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us