sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காணிக்கை தலைமுடி சேகரிப்பு ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம்

/

காணிக்கை தலைமுடி சேகரிப்பு ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம்

காணிக்கை தலைமுடி சேகரிப்பு ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம்

காணிக்கை தலைமுடி சேகரிப்பு ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம்

1


ADDED : ஜூன் 20, 2024 10:48 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 10:48 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், காணிக்கை தலைமுடி சேகரிப்பதற்கான உரிமம் பெறுவதற்கான ஏலம், நேற்று நடந்தது. அதில், 53.62 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

திப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கடந்த 12ம் தேதி நடந்த ஓராண்டுக்கான ஏலத்தில், பிரசாத கடை 46.30 லட்சம் ரூபாய்க்கும், தற்காலிக கடை 1.50 லட்சம் ரூபாய்க்கும், வாகன நிறுத்தம் கட்டணம் 4.10 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

மேலும், ஆடு, கோழி சேகரிப்பதற்கான ஏலம் 83,000 ரூபாய்க்கும், வெள்ளி உரு விற்பனை செய்யும் உரிமம் 1.20 லட்சம் ரூபாய்க்கும், நெய் தீபம் விற்பதற்கான உரிமம் 22.01 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது.

இதில், காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம், சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கான ஏலம், குறைந்த தொகைக்கு கேட்கப்பட்டதால் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தலைமுடி சேகரிப்பு உரிமம் மற்றும் சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கான ஏலம், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் முன்னிலையில், நேற்று நடந்தது.

இதில், காணிக்கை தலைமுடி சேகரிப்பு உரிமம் ஏலம் 53.62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கான ஏலம்,யாரும் கேட்காததால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us