/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி,:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மீனாட்சி நகரில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில் தேங்கிய பிளாஸ்டிக்கழிவுகள், மரம், செடிகளை அப்புறப்படுத்தி, மழைநீர் சீராக செல்வதற்கு, நேற்று முதல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியை மேற்கொண்டனர்.
மேலும், பருவ மழையை துவங்குவதற்கு முன் மழைநீர்சீராக செல்ல வசதியாக, நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், மழைநீர் வடிகால்வாயை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.