sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வெளியூருக்கு பஸ் இன்றி பயணியர் அவதி

/

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வெளியூருக்கு பஸ் இன்றி பயணியர் அவதி

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வெளியூருக்கு பஸ் இன்றி பயணியர் அவதி

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வெளியூருக்கு பஸ் இன்றி பயணியர் அவதி


ADDED : ஜூன் 09, 2024 02:38 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்துள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில், வார விடுமுறை நாளான நேற்று, போதிய பேருந்துகள் இல்லாமல் பயணியர் தவித்தனர்.

இதுகுறித்து பயணியர் கூறியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, விடுமுறை நாளான நேற்று, பல இடங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை. குறிப்பாக திருவண்ணாமலை செல்ல, 2:00 மணிக்கு வந்த பயணியர், மாலை 4:00 மணியாகியும் பேருந்து இல்லாததால், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

திருச்சி, மதுரை செல்ல காத்திருந்த பயணியர், பேருந்து இல்லாததால் அதிருப்தியடைந்தனர்.

வார விடுமுறை நாட்களில், மதியம் 12:00 மணியிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணியருக்கு, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.

எனவே, வார விடுமுறை நாட்களில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ஊர்களுக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

அதற்கு அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us