sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குடிநீர் ஆலை கட்டுமானத்திற்கு கான்கிரீட் பிளான்ட் அமைப்பு

/

குடிநீர் ஆலை கட்டுமானத்திற்கு கான்கிரீட் பிளான்ட் அமைப்பு

குடிநீர் ஆலை கட்டுமானத்திற்கு கான்கிரீட் பிளான்ட் அமைப்பு

குடிநீர் ஆலை கட்டுமானத்திற்கு கான்கிரீட் பிளான்ட் அமைப்பு


ADDED : மே 10, 2024 01:44 AM

Google News

ADDED : மே 10, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், சென்னை குடிநீர் தேவைக்காக, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயக்கப்படுகின்றன.

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி, சூலேரிக்காடில், முதல் பிரிவாக, ஒரு நாளில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 2013 முதல் இயங்குகிறது.

அதே பிரிவின்கீழ், ஒரு நாளில், 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் மற்றொரு ஆலை அமைக்கப்பட்டு, கடந்த பிப்., முதல் இயங்குகிறது.

அதே ஊராட்சி பேரூரில், இரண்டாம் பிரிவாக, ஒரு நாளில் 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 4,277 கோடி ரூபாய் மதிப்பில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட்டில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக, புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட 85 ஏக்கர் நிலத்தில் இருந்த சவுக்கு மரங்கள், தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் வெட்டப்பட்டது.

ஆலை ஒப்பந்த நிறுவனம், கட்டுமானத்திற்காக, சமனற்ற மணற்பரப்பை சமன் செய்தது. கட்டுமானப் பணிகளை துவக்க, தற்போது கான்கிரீட் கலவை தயாரிக்கும் 'பிளான்ட்' அமைத்துள்ளது.






      Dinamalar
      Follow us