sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

/

மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லை மல்லிகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 06, 2024 12:38 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி அம்பிகை உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.

அத்துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை, இக்கோவிலை நிர்வகிக்கிறது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், நீண்டகாலத்திற்கு முன் சீரழிந்தது.

அதை புதுப்பிக்க முடிவெடுத்து, காஞ்சி சங்கர மட சுவாமி பாலாலயம் செய்தார். அதன்பின்னும் திருப்பணிகள் துவக்கப்படாததால், கோவில் முற்றிலும் சீரழிந்து, வழிபாடு இன்றி குப்பை களமானது.

இந்நிலையில், பக்தர்களே கோவிலை புனரமைத்து, கடந்த 2004ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். துவக்கத்தில் சுவாமி, அம்பாள் ஆகியோர் சன்னிதிகள் மட்டுமேஇருந்தன. பின், நடராஜர் சன்னிதியும், முதன்முறையாக கொடிமரமும் அமைக்கப்பட்டன.

உற்சவ சுவாமியர் சந்திரசேகர், அம்பாள், விநாயகர்,முருகர், நடராஜர் மற்றும்சண்டிகேஸ்வரர்ஆகியோருக்கு, உலோக சிலைகளும் செய்யப்பட்டு, கடந்த 2017ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நன்கொடை வாயிலாக, கோவில் நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைக்க, நந்திகேஸ்வரர் பிரதோஷ குழுவினர் முடிவெடுத்தனர்.

கடந்த ஆண்டு பணிகள்துவக்கப்பட்டு, பாறைகற்களில், மூன்று நிலைகளில், 23 அடி உயர கோபுரம் கலையம்சத்துடன் அமைக் கப்பட்டுள்ளது.

உட்புற மண்டப கான்கிரீட் தரையை அகற்றி, பாறை கற்கள் தளமாக மேம்படுத்தி, புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தின் முன்புறம் பாறை கற்களில்அலங்கார சுற்றுச்சுவர், உயரம் குறைவான மூன்று புற சுற்றுச்சுவரை உயர்த்துதல், முற்றிலும் புதிய வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

வரும் செப்., மாதம் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us