sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் இறக்கிவிடப்படும் பயணியர் கிளாம்பாக்கத்தில் தொடரும் விதிமீறல்

/

சாலையில் இறக்கிவிடப்படும் பயணியர் கிளாம்பாக்கத்தில் தொடரும் விதிமீறல்

சாலையில் இறக்கிவிடப்படும் பயணியர் கிளாம்பாக்கத்தில் தொடரும் விதிமீறல்

சாலையில் இறக்கிவிடப்படும் பயணியர் கிளாம்பாக்கத்தில் தொடரும் விதிமீறல்


ADDED : மே 25, 2024 12:54 AM

Google News

ADDED : மே 25, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், ஜி.எஸ்.டி., சாலையிலேயே தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளை நிறுத்தி, பயணியர் இறக்கிவிடப்படுகின்றனர்.

இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, அங்கு இறக்கிவிடப்பட்ட பயணியர், சாலையை ஆபத்தான முறையில் கடந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்ல சிரமப்படுகின்றனர்.

இதை தவிர்க்கும் விதமாக, நேற்று முன்தினம் போக்குவரத்து போலீசார், சாலையில் நிறுத்தி பயணியரை இறக்கிவிடும் பேருந்துகளுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, ரசீது வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையிலும், வழக்கம் போல் அனைத்து பேருந்துகளும் ஜி.எஸ்.டி., சாலையில் நிறுத்தப்பட்டு, பயணியர் இறக்கிவிடப்பட்டனர்.

எனவே, இந்த இடத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில், போக்குவரத்து போலீசாரை நிறுத்தி, தொடர்ந்து கண்காணித்து, சாலையில் பயணியரை இறக்கிவிடும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us