sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்வு கூட்டம்

/

கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்வு கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்வு கூட்டம்

கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்வு கூட்டம்


ADDED : செப் 11, 2024 08:26 PM

Google News

ADDED : செப் 11, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மண்டலத்தில், கூட்டுறவு பணியாளர் குறைதீர்வு கூட்டம், இன்று காலை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:

கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுத் துறை அமைச்சர், கூட்டுறவு பணியாளர் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றிவரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான பணி தொடர்பாகவும், பணியின்போதும், வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை கேட்டறிய திட்டமிடப்பட்டு உள்ளது.

அக்குறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்க்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் தலைமையில், செங்கல்பட்டு மண்டலத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம், வரும் 12ம் தேதி, காலை 10:00 மணிக்கு, நடக்கிறது.

பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பாகவும், பணியின்போது வேறு வகையில் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்கள் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us