/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினருக்கு கடனுதவி; விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 07, 2024 10:50 PM
செங்கல்பட்டு : சிறுபான்மையினர் தொழில், கல்வி உள்ளிட்டவற்றுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, தனிநபர் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில், கைவினை தொழில், கல்வி ஆகியவற்றுக்கு, கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
தனிநபர் கடன், ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகித்தில், 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ - மாணவியருக்கு, 20 லட்சம் ரூபாய் வரை, 3 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், இக்கடனுதவியை பெற, விண்ணப்பங்களை பூர்த்திசெய்து, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.