/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மேல்நிலை தொட்டி சிறுமயிலுாரில் விபத்து அபாயம்
/
சேதமான மேல்நிலை தொட்டி சிறுமயிலுாரில் விபத்து அபாயம்
சேதமான மேல்நிலை தொட்டி சிறுமயிலுாரில் விபத்து அபாயம்
சேதமான மேல்நிலை தொட்டி சிறுமயிலுாரில் விபத்து அபாயம்
ADDED : மே 30, 2024 01:02 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே சிறுமயிலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்து, தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது.
அதனால், சில மாதங்களுக்கு முன், மாவட்ட நிதிக்குழு மானியத்தில் இருந்து, 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பாழடைந்த பழைய மேல்நிலைத் தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் பலத்த காற்று வீசும்போது, மேல்நிலைத் தொட்டி குடியிருப்புகள் மீது சாய்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை தேக்கத் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.