/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான மேல்நிலை தொட்டி; சிறுதாமூரில் விபத்து அபாயம்
/
சேதமான மேல்நிலை தொட்டி; சிறுதாமூரில் விபத்து அபாயம்
சேதமான மேல்நிலை தொட்டி; சிறுதாமூரில் விபத்து அபாயம்
சேதமான மேல்நிலை தொட்டி; சிறுதாமூரில் விபத்து அபாயம்
ADDED : ஆக 16, 2024 11:58 PM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில், அங்கன்வாடி மையம் அருகே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், 60,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டடு, குடிநீர் குழாய் வாயிலாக, மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் ஆன நிலையில், துாண்களில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அதனால், தொட்டியின் துாண்கள் உறுதித்தன்மை இன்றி உள்ளன.
எனவே, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.