sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமடைந்த குடியிருப்பு வீடுகள்; அபாயகரமாக வசிக்கும் இருளர்கள்

/

சேதமடைந்த குடியிருப்பு வீடுகள்; அபாயகரமாக வசிக்கும் இருளர்கள்

சேதமடைந்த குடியிருப்பு வீடுகள்; அபாயகரமாக வசிக்கும் இருளர்கள்

சேதமடைந்த குடியிருப்பு வீடுகள்; அபாயகரமாக வசிக்கும் இருளர்கள்


ADDED : மே 05, 2024 11:59 PM

Google News

ADDED : மே 05, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சி காரைத்திட்டில், இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். புதுப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற இடங்களில், கூலி வேலை செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன், அவர்கள் குடிசையில் வசித்தனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த, தண்டரை பகுதி, இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு, காரைத்திட்டில் இரண்டு ஏக்கர் நிலத்தை, அதன் பெயரில் கிரயத்திற்கு வாங்கியது.

இருளர் குடும்பங்களுக்கு, 2005ல், 36 வீடுகள் கட்டி ஒப்படைத்தது. அவர்களும், 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

சொற்ப வருமானமே உள்ள அவர்களால், வீட்டை பராமரிக்கவோ, புதுப்பிக்கவோ இயலவில்லை. வீடு கட்டப்பட்ட சில ஆண்டுகளில், சுவர், கூரை விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பெயர்ந்து, கட்டடம் பலமிழந்தது.

வாயிற்கதவு, ஜன்னல்கள் சேதமடைந்து சீரழிந்துள்ளன. மழைநீர் வீடுகளுக்குள் பெருக்கெடுக்கிறது. இப்பகுதி தாழ்வாக உள்ளதால், மழை வெள்ளம் சூழ்கிறது.

இடியும் அபாயத்தில் உள்ள வீடுகளில், அபாயத்துடன் வசிக்கின்ற அவர்கள், வீடுகளை புனரமைக்க அல்லது புதிய வீடுகள் கட்ட, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, அமைப்பின் பெயரில் உள்ள பட்டா அடிப்படையில், ஆதிதிராவிடர், பழங்குடி நலத்துறை, வீடற்ற 17 குடும்பங்களுக்கு, தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக வீடுகள் கட்டியது.

சில ஆண்டுகளுக்கு முன் பணிகளை துவக்கி, ஓராண்டிற்கு முன் முடித்தும், அவற்றுக்கு மின் இணைப்பு பெறாமல், பயனாளிகளிடம் முறையாக ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

வீட்டிற்கு உரியவர்கள், தாமாக குடியேறி, மின்சாரம் இன்றி, இருளில் வசிக்கின்றனர். அப்பகுதி கான்கிரீட் சாலை முழுமையாக அமைக்கப்படாமல், அரைகுறையாக உள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், குடிநீர் நிரப்பப்படாமல் பயனின்றி சீரழிகிறது.

இந்நிலையில், இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை, பயனாளி பெயரில் தனி பட்டாவாக மாற்றி வழங்கவும், வீடற்ற மற்றவர்களுக்கும், அரசு திட்டத்தில் வீடு கட்டவும், பழைய வீடுகளை புதுப்பிக்க அல்லது புதிதாக கட்டவும், அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us